ப்ரொபேஷனரி அலுவலர் (Probationay Officer)
தமிழ்நாடு
மற்றும் ஆந்திராவில் உள்ள கரூர் வைஷ்யா வங்கியில் (Karur Vysya Bank),
ப்ரொபேஷனரி அலுவலர் (Probationay Officer) அலுவலர் பணிக்கான ஆள்சேர்க்கை
நடைபெற உள்ளது. ப்ரொபேஷனரி அலுவலராக (Probationay Officer) பணியாற்ற 500
பணியிடங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில்
முதுநிலைப் பட்டம் அல்லது 50 சதவீத மதிப்பெண்களுடன் B.E, B.Tech
பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 21 முதல் 26 வயதிற்குட்பட்டவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர்கள் IBPS தேர்வில் பெறும்
மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். பின்னர் IFBI மற்றும்
கேவிபி வங்கி குழுவின் நேர்முகத் தேர்விலும் பங்கேற்க வேண்டும். இறுதியாக
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, Branch Banking-ல் முதுநிலைப்
பட்டயத்திற்கான பயிற்சி வழங்கப்படும். ஒரு மாத கால பயிற்சியை வெற்றிகரமாக
பூர்த்தி செய்பவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.டிசம்பர் 21-ம்
தேதிக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க, மற்றும் கூடுதல்
விவரங்களுக்கும், www.kvb.co.in எனும் இணையதளத்தை காணலாம்.
No comments:
Post a Comment